
குறைந்த முதலீட்டில் அதிக லாபம் தருவதாகக் கூறி வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் வழியாக நடைபெறும் ‘ஆன்லைன் டிரேடிங்’ மோசடிகளில் மக்கள் சிக்க வேண்டாம் என தூத்துக்குடி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்துள்ளார். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக 1930 என்ற எண்ணிற்கு அழைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.