RNI.No. TNTAM / 2023 / 88613

வள்ளலாரின் நோக்கங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம்

வள்ளலாரின் நோக்கங்களைச் சிதைக்க அனுமதிக்க மாட்டோம் முதல்வர் மு.க.ஸ்டாலின் முழக்கம்! சென்னையில் இந்து சமய சித்த மருத்துவமனை மற்றும் பக்தர்கள் அறநிலையத்துறை சார்பில் நடைபெற்ற தங்கும் ‘அனைத்துலக வள்ளலார் மாநாடு 2026 நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள்,”வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன்” என்று பசிப்பிணியை போக்க வழிவகை செய்த வள்ளலாரின் உன்னத நோக்கங்களையும், பண்பாட்டு அடையாளங்களையும் சிதைக்க நினைப்பவர்களை ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம் என உறுதிபடத் தெரிவித்தார். விழாவில் மாநாட்டு ஆய்வு மலரை வெளியிட்ட அவர், வடலூரில் 12.23 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள விடுதிகளைத் திறந்து வைத்ததோடு, சென்னையில் வள்ளலார் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்ற முக்கிய அறிவிப்பையும் வெளியிட்டார். திராவிட மாடல் அரசு வள்ளலார் காட்டிய தனிப்பெருங்கருணை வழியில் காலை உணவுத் திட்டம் முதல் தாயுமானவர் திட்டம் வரை பல்வேறு மக்கள் நலத் திட்டங்களைச் செயல்வடிவில் நடைமுறைப்படுத்தி வருவதாக நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்ட முதல்வர், தமிழ்ச் சமூகத்தின் புரட்சியாளரான வள்ளலாரின் கோட்பாடுகளைப் போற்றிப் பாதுகாப்பதே அரசின் கடமை எனத் தனது வலியுறுத்தினார். உரையில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *