RNI.No. TNTAM / 2023 / 88613

13,000 கோடி அமைப்பற்ற அலை மின் நிலையம்

சென்னை :
₹13,000 கோடி திட்டத்தில் தமிழ்நாட்டில் அமைக்கப்பட உள்ள அலை மின் நிலையத்திற்கு மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த அலை மின் நிலையம் கடற்கரைப் பகுதியில் அமைக்கப்படவுள்ளதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படும் என்றும், கடல் வாழ் உயிரினங்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மின் உற்பத்தித் திட்டம் செயல்படுத்தப்பட்ட பின், மாநிலத்தின் மின் தேவையை பூர்த்தி செய்ய இது பெரிதும் உதவும்.
மேலும், மாற்று ஆற்றல் வளங்களை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த திட்டம் முக்கியமானதாக கருதப்படுகிறது.

இந்த திட்டம் மூலம் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும்,
உள்ளூர் மக்களின் பொருளாதார நிலை மேம்படும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அலை மின் நிலையம் அமைப்பதற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளதாகவும்,
உடனடி உற்பத்தி கட்டமைப்புகள் தயார் செய்யப்பட்டு வருகின்றன என்றும் கூறப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *