RNI.No. TNTAM / 2023 / 88613

பாண்டிச்சேரி விமான நிலைய விரிவாக்கம்



புதுச்சேரி மற்றும் அதன் அண்டை மாவட்டங்களின் பொருளாதார வளர்ச்சியைப் புரட்டிப் போடக்கூடிய பாண்டிச்சேரி விமான நிலைய விரிவாக்கப் பணிகள் தற்போது முக்கியக் கட்டத்தை எட்டியுள்ளன. பெரிய ரக விமானங்கள் மற்றும் சர்வதேச விமானங்களை இயக்கும் வகையில் தற்போதுள்ள ஓடுதளத்தை நீட்டிக்க, தமிழகப் பகுதியான விழுப்புரம் மாவட்டத்தின் கோட்டக்குப்பம் உள்ளிட்ட கிராமங்களில் சுமார் 200 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தும் பணிகளைப் புதுச்சேரி மற்றும் தமிழக அரசுகள் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றன.

மத்திய அரசின் ‘உடான்’ திட்டத்தின் கீழ் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள இத்திட்டம் நிறைவேறும்பட்சத்தில், சுற்றுலா மற்றும் தொழில் வர்த்தகம் பன்மடங்கு பெருகுவதோடு, ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளும் உருவாகும். மேலும், மக்கள் தில்லி, மும்பை போன்ற பெருநகரங்களுக்குப் புதுச்சேரியிலிருந்தே நேரடியாகப் பயணம் செய்யும் வசதி உறுதி செய்யப்படும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *