RNI.No. TNTAM / 2023 / 88613

செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படாததால் மக்கள் அவதி

செங்கல்பட்டு மாவட்டத்தில் உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மூலம் புதிதாக ஸ்மார்ட் குடும்ப அட்டை பெற விண்ணப்பித்த பொதுமக்களிடம் விசாரணை மேற்கொண்டு தகுதி உள்ளவர்களுக்கு ஏற்கனவே ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில், கடந்த ஆறு மாதங்களாக புதிய குடும்ப அட்டைகள் வழங்கப்படாமல் நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகப் புகார் எழுந்துள்ளது.

இதனால் புதிய குடும்ப அட்டை கிடைக்காமல் அலைக்கழிக்கப்படும் பொதுமக்கள், குடும்ப அட்டை இல்லாத காரணத்தினால் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளிட்ட அரசு நலத்திட்ட உதவிகள் கிடைக்காமல் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

பழைய குடும்ப அட்டைகளில் இருந்து ஆதாரப்பூர்வமாக நீக்கப்பட்டு தற்போது தனித்த குடும்பமாக வசித்து வரும் சூழலில், புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்கப்படாததால் அவர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அலுவலகங்களுக்கு நேரில் சென்று மனுக்கள் அளித்தும் முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

எனவே, ஏற்கனவே ஒப்புதல் பெற்ற விண்ணப்பங்களுக்கு எவ்விதத் தேவையற்ற தாமதமும் இன்றி உடனடியாகப் புதிய ஸ்மார்ட் குடும்ப அட்டைகள் வழங்க வேண்டும் என்று செங்கல்பட்டு மாவட்ட மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *