RNI.No. TNTAM / 2023 / 88613

கொல்கத்தா இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல்

கொல்கத்தா இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் ஷில்லாங் புறப்பட தயாராகவிருந்த இண்டிகோ விமானத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்க மாநிலம், விமான நிலையத்திலிருந்து இண்டிகோ விமானம் சனிக்கிழமை காலை 9:15 மணிக்கு ஷில்லாங் புறப்படத் தயாராகவிருந்தது. அப்போது விமானத்தின் கழிப்பறையில் ஒரு காகிதத் துண்டு இருப்பதை விமானக் குழுவினர் கண்டுபிடித்தனர். அதில் விமானத்திற்குள் வெடிகுண்டு இருப்பதாகக் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக, பயணிகள் அனைவரும் விமானத்திலிருந்து வெளியேற்றப்பட்டனர். பின்னர் விமானம் தனிமைப்படுத்தப்பட்டு முழுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டது. சோதனையில் சந்தேகப்படியான பொருள்கள் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து வெடிகுண்டு மிரட்டல் சம்பவத்தால் கொல்கத்தா விமான நிலையத்தில் சிறிது பரபரப்பு நிலவியது. வெறும் புரளி என தெரியவந்தது..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *